ரோமர் 3:8தீமையால் நன்மையா?
நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
Romans 3:8
தீமையால் நன்மையா?
‘நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக’ என்று சிலர் பவுலை பழிசொல்லி சொன்னார்கள். இது அவருடைய போதனை அல்ல, அவரை எதிர்ப்பவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டு. அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நியாயமானதே என்று அவர் தெளிவாக சொல்கிறார். சத்தியத்தை திரிக்கும் ஒவ்வொரு வாதத்தையும் பவுல் வேரோடு அறுத்துப் போடுகிறார்.
