ரோமர் 7:5மாம்சத்தின் காலம்
நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.
Romans 7:5
மாம்சத்தின் காலம்
பழைய வாழ்வில் நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்தபோது, பிரமாணம் காட்டிய தடைகளே பாவ இச்சைகளைத் தூண்டிவிட்டன. கட்டுப்பாடு காட்டப்பட்டதும் மனது அதையே செய்யத் துடிக்கும் என்பது மனித இயல்பு. அந்தக் காலத்தில் நம் அவயவங்கள் மரணத்திற்கே கனி கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தன. அந்தப் பழைய நிலையை நினைவுகூர்ந்து பவுல் இப்போதுள்ள புதிய நிலையை மேலும் தெளிவாக்குகிறார்.
