1 இராஜாக்கள் 21:4படுக்கையில் புரண்ட ராஜா
இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய், தன் வீட்டிற்கு வந்து, போஜனம்பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.
1 Kings 21:4
படுக்கையில் புரண்ட ராஜா
ராஜாவாக இருந்தும் ஆகாபுக்கு ஒரு தோட்டத்தைப் பெற முடியாமல் போனது. இதை ஏற்றுக்கொள்ள மனசு இல்லாமல், சாப்பாடே சாப்பிடாமல், முகத்தைத் திருப்பிக்கொண்டு படுத்துக்கிடந்தார். ஒரு ராஜாவுக்கு ஏற்ற செயலா இது? சின்ன குழந்தை பொம்மைக்கு அழுவது போல, தான் ஆசைப்பட்டதை பெறாததால் மனம் சலித்துப் போனார் ஆகாப்.
