அப்போஸ்தலர் 5:8கடைசி வாய்ப்பு
பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.
Acts 5:8
கடைசி வாய்ப்பு
பேதுரு சப்பீராளிடம் நேரடியாகக் கேட்டார் - நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள். இது அவளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கடைசி வாய்ப்பு, உண்மையைச் சொல்லும் வாய்ப்பு. ஆனால் அவளும் தன் புருஷனைப் போலவே பொய்யையே தேர்ந்துகொண்டாள். 'ஆம், இவ்வளவுக்குத்தான்' என்ற அவளுடைய பதில் அவளையும் அதே வழியில் நடத்திச் செல்லும்.
