உபாகமம் 24:21திராட்சத் தோட்டமும்
நீ உன் திராட்சப்பழங்களை அறுத்தபின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
Deuteronomy 24:21
திராட்சத் தோட்டமும்
திராட்சப்பழங்களை அறுத்தபின் மறுபடியும் அறுக்கத் திரும்பிப்போகக் கூடாது; அதை ஏழைக்கு விட்டுவிட வேண்டும். வயல், தோட்டம் என எல்லா அறுவடையிலும் ஒரு பங்கு ஏழைக்கென ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தம்முடைய நிலத்தின் மேல் முழு உரிமை உள்ளவனும் மற்றவனுக்காக ஒரு பங்கை விட வேண்டும் என்பது அழகான நியாயம்.
