பிரசங்கி 5:1நடையைக் காத்துக்கொள்
நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.
Ecclesiastes 5:1
நடையைக் காத்துக்கொள்
தேவாலயத்தின் வாசலில் நின்று சாலொமோன் சொல்கிறார் - உள்ளே போகும்போது உள்ளத்தையும் பாதங்களையும் கவனமாய் வையுங்கள் என்று. சிலர் வாயால் நேர்ச்சை சொல்லிவிட்டு, மனத்தில் அதை நினைக்காமல் இருப்பார்கள். 'செவிகொடுக்கச் சேர்வதே நலம்' என்பது, பேசுவதற்கு முன் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதே ஞானம் என்பதைக் காட்டுகிறது. வாயால் அர்ப்பணிக்காமல், முதலில் காதால் கேட்கக் கற்றுக்கொள்வோம்.
