ஏசாயா 7:1மூன்று அரசர்கள் எருசலேமில்
உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கக் கூடாமற்போயிற்று.
Isaiah 7:1
மூன்று அரசர்கள் எருசலேமில்
ஆகாஸ் அரசனாக இருந்த காலம். சிரியாவின் ரேத்சீனும், இஸ்ரவேலின் பெக்காவும் கூட்டு சேர்ந்து எருசலேமை முற்றுகைபோட வந்தார்கள். இந்த இரு ராஜாக்களும் ஒன்றுசேர்ந்து யூதாவை அழிக்கத் திட்டமிட்டாலும், எருசலேமை அவர்களால் பிடிக்க முடியவில்லை என்று வேதம் முன்பே சொல்லிவிடுகிறது. கடவுளின் காவல் இல்லாமல் எந்த மதிலும் நிற்காது, எந்த சதியும் வெல்லாது.
