ஏசாயா 7:2காற்றில் அசையும் மரங்கள்
சீரியர் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது.
Isaiah 7:2
காற்றில் அசையும் மரங்கள்
சிரியாவும் எப்பிராயீமும் (இஸ்ரவேல்) கூட்டு சேர்ந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டவுடன், தாவீதின் வம்சத்தாருக்கு தூக்கம் பறந்தது. அரசன் ஆகாஸின் இருதயமும், மக்களின் இருதயமும் காட்டு மரங்கள் காற்றில் அசைவது போல் அச்சத்தில் அதிர்ந்தது. பாருங்கள், அரண்மனையில் இருந்தாலும் நம்பிக்கை இல்லாதவனுக்கு அரண் ஒரு பாதுகாப்பாகத் தெரியாது. பயம் என்பது சூழ்நிலையைவிட இருதயத்தின் நிலையைப் பொருத்தது.
