எரேமியா 43:2பொய் சொல்லுகிறாய் என்றனர்
ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும், கரேயாவின் குமாரனாகிய யோகானானும், அகங்காரிகளான எல்லா மனுஷரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை.
Jeremiah 43:2
பொய் சொல்லுகிறாய் என்றனர்
அசரியாவும் யோகானானும், அகங்காரமுள்ள மனுஷரும் எரேமியாவை நேரடியாகவே எதிர்த்தனர். தேவன் சொன்ன வார்த்தையை தங்களுக்குப் பிடிக்காததால் 'நீ பொய் சொல்லுகிறாய்' என்று சொல்லிவிட்டனர். மனுஷர் தங்கள் விருப்பப்படி முடிவு செய்துவிட்டு, அதற்கு பொருந்தாத வார்த்தையை பொய் என்று சொல்லிவிடுவது எத்தனை பழையது. உள்ளத்தில் முடிவு செய்திருந்தால், வாய் திறந்து கேட்பதும் வெறும் சம்பிரதாயமே.
