யோபு 27:9கூப்பிடுதலைக் கேட்பாரோ
ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?
Job 27:9
கூப்பிடுதலைக் கேட்பாரோ
ஆபத்து வரும்போது தேவன் அந்த மாயக்காரனின் கூப்பிடுதலைக் கேட்பாரோ என்று யோபு கேட்கிறார். இது நிலையான ஆண்டவனுடன் உறவு இல்லாதவனுடைய நிலையைக் காட்டுகிறது. வழக்கமாக தொழுதுகொள்ளாதவன், ஆபத்தில் மாத்திரம் கூப்பிடுவது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? இது யோபு தன் நண்பர்களை மறைமுகமாக எச்சரிக்கும் விதம்.
