யோபு 8:6சுத்தமாய் இருந்தால்
சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.
Job 8:6
சுத்தமாய் இருந்தால்
இதிலும் ஒரு நிபந்தனை வைக்கிறார் பில்தாத் - யோபு சுத்தமும் செம்மையுமாய் இருந்தால் மட்டுமே தேவன் அவருக்காக விழித்து, அவருடைய வாசஸ்தலத்தை சீராக்குவார் என்கிறார். இதன் பொருள் என்ன? யோபு இப்போது சுத்தமாய் இல்லை, அதனால்தான் இந்த துன்பம் என்ற குற்றச்சாட்டே இதன் அடிப்படை. ஆனால் நமக்குத் தெரியும், யோபு உத்தமன் மற்றும் யதார்த்தவான் என்று தேவனே சாட்சி சொன்னார் (யோபு 1:8).
