யோவான் 20:2எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்
உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
John 20:2
எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்
மரியாள் ஓடிப்போய் பேதுருவிடமும் யோவானிடமும் சொல்கிறாள், கர்த்தரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று. அவளுடைய வார்த்தைகளில் பயமும் குழப்பமும் இருக்கிறது, நம்பிக்கை இல்லை. அவள் இன்னும் இயேசு உயிரோடு எழுந்திருப்பார் என்று நினைக்கவில்லை, வெறும் மனித யோசனையில் மட்டும் இருக்கிறாள். சிலவேளை நமக்கும் நேரும் விஷயங்களை நாம் முதலில் மனித கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்போம், தேவனுடைய கையை பின்னால் தான் காண்போம்.
