லேவியராகமம் 5:4பதறி இட்ட ஆணை
மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.
Leviticus 5:4
பதறி இட்ட ஆணை
கோபத்திலோ, பதற்றத்திலோ வாயில் இருந்து வெளிவரும் வார்த்தைகள் சிலசமயம் ஆணையாக மாறிவிடும். மனம் நினைக்காமலே உதடுகள் ஆணையிட்டுவிடும் நேரங்கள் நமக்கும் இருக்கின்றன. அப்படி பதறி இட்ட ஆணையையும் தேவன் லேசாய் எடுத்துக்கொள்ளவில்லை, 'அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்' என்று சொல்கிறார். நம் வார்த்தைகளை எடையுள்ளதாய்ப் பேசும் பழக்கத்தை இந்த வேதம் நமக்குக் கற்றுத்தருகிறது.
