லூக்கா 10:2அறுப்பு மிகுதி
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
Luke 10:2
அறுப்பு மிகுதி
வயல் முழுக்க பழுத்த தானியம், ஆனால் அறுவடை செய்ய ஆட்கள் இல்லை என்ற வேதனை இயேசுவின் வார்த்தையில் தெரிகிறது. மக்கள் தேவனை அறியத் தயாராக இருக்கின்றனர், சொல்பவர்கள் மட்டும் போதுமான அளவு இல்லை. அதனால் 'அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்' என்று ஜெபிக்கச் சொல்கிறார். வேலை செய்பவனுக்கு முன் ஜெபிப்பவன் தேவை என்பதை இயேசு நமக்குக் காட்டுகிறார். நம் வீட்டிலும், ஊரிலும் இன்னும் அறுப்புக்குக் காத்திருக்கும் வயல் இருக்கிறது.
