லூக்கா 18:41என்ன வேண்டும் என்றார்
நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
Luke 18:41
என்ன வேண்டும் என்றார்
குருடன் கூக்குரலிட்டதைக் கேட்டு இயேசு அவனை நிற்கச்செய்து, அருகில் வரவழைத்தார். ராஜாதி ராஜாவாகிய அவர் அந்த பாவப்பட்ட மனிதனிடம் கேட்ட கேள்வி எவ்வளவு எளிமையானது - 'நான் உனக்கு என்னசெய்யவேண்டும்' என்று. பணமோ சொத்தோ கேட்கவில்லை அந்த மனிதன், 'ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும்' என்றான். தன் மிகப்பெரிய தேவையை மறைக்காமல் நேராகச் சொன்னான். நமக்கும் இயேசு இதே கேள்வியைத் தான் கேட்கிறார், நம் இதயத்தின் ஆழத்திலிருக்கும் தேவையை அவர் முன் வைக்க வேண்டும்.
