லூக்கா 7:4பாத்திரன் என்ற சாட்சி
அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்.
Luke 7:4
பாத்திரன் என்ற சாட்சி
மூப்பர் இயேசுவிடம் வந்து, இந்த அதிபதிக்காக ஆவலுடன் வேண்டிக்கொண்டார்கள். 'நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்' என்று அவரை ஆதரித்துப் பேசினார்கள். 'அவன் பாத்திரனாயிருக்கிறான்' என்ற வார்த்தை அந்த மனிதன் யூத ஜனத்திடையே எப்படி நல்லெண்ணத்துடன் வாழ்ந்தார் என்பதைச் சொல்கிறது.
