மாற்கு 1:40முழந்தாள்படியிட்ட குஷ்டரோகி
அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.
Mark 1:40
முழந்தாள்படியிட்ட குஷ்டரோகி
குஷ்டரோகிகள் அந்த காலத்தில் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள், அவர்களை எவரும் நெருங்க பயப்படுவார்கள். ஆனால் இந்த மனுஷன் தன் நோயையும் மறந்து இயேசு முன் முழந்தாள்படியிட்டு, 'உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்' என்று வேண்டிக்கொண்டார். அவருக்கு இயேசுவின் வல்லமையில் சந்தேகம் இல்லை, ஆனால் இயேசுவின் சித்தம் என்ன என்பதைத்தான் அவர் அறிய விரும்பினார். நமக்கும் இப்படி முழந்தாள்படியிட்டு, தாழ்மையாக வேண்டிக் கொள்ளும் மனது வேண்டும்.
