மாற்கு 2:13கடலருகே மறுபடியும்
அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
Mark 2:13
கடலருகே மறுபடியும்
இயேசு மறுபடியும் கடலருகே சென்றார், அங்கும் ஜனங்கள் திரண்டு வந்தார்கள். எங்கு சென்றாலும் அவரைத் தேடும் இருதயங்கள் அவரை நோக்கி ஓடினார்கள். அவர் அவர்களை புறக்கணிக்காமல் அவர்களுக்குப் போதகம் செய்தார். தேடும் இருதயங்களை இயேசு ஒருபோதும் வெறுங்கையோடு அனுப்புவதில்லை.
