நீதிமொழிகள் 11:26கட்டி வைத்தலும் விற்றலும்
தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
Proverbs 11:26
கட்டி வைத்தலும் விற்றலும்
பசி காலத்தில் தானியத்தை மக்களுக்கு விற்காமல் கட்டி வைத்திருப்பவனை ஜனங்கள் சபிப்பார்கள் - இது சுயநலத்தின் அடையாளம். ஆனால் அதே தானியத்தை நேரத்தில் விற்று, மக்களின் தேவையை பூர்த்தி செய்பவன் தலைமேல் ஆசீர்வாதம் பெறுவான். நமக்கு இருக்கும் வளத்தை பிற தேவைக்கு பயன்படுத்துவதே மக்களின் இருதயத்தை நமக்கு திறக்கும். கொடுக்கும் கை என்றும் ஆசீர்வதிக்கப்படும்.
