ரோமர் 9:5இனத்தில் பிறந்த தேவன்
பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.
Romans 9:5
இனத்தில் பிறந்த தேவன்
பிதாக்களும் இஸ்ரவேலருடையவர்களே, அதைவிட மேலான ஆசீர்வாதமாக மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களிடத்திலிருந்தே பிறந்தார் என்று பவுல் சொல்கிறார். இதைச் சொல்லிவிட்டு உடனே 'என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன்' என்று கிறிஸ்துவின் தேவத்தை உறுதிப்படுத்துகிறார். இஸ்ரவேலுக்கு இவ்வளவு பெரிய கௌரவம் கொடுக்கப்பட்டிருந்தும் அவர்கள் அதைத் தவற விட்டது எத்துணை வேதனை தரும் விஷயம். தேவன் கொடுத்த மிகச் சிறந்த கொடையை நம் கண்முன் இருந்தும் நாம் அறியாமல் விட்டுவிடக் கூடாது.
