உன்னதப்பாட்டு 2:15சிறு நரிகளைப் பிடியுங்கள்
திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.
Song of Songs 2:15
சிறு நரிகளைப் பிடியுங்கள்
திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாய் இருக்கும் மென்மையான காலத்தில், அவற்றைக் கெடுக்கும் சிறு நரிகளைப் பிடிக்கவேண்டும் என்கிறார் மணமகன். புது அன்பு இன்னும் மென்மையாய், பாதிக்கப்படக்கூடியதாய் இருக்கும் காலம் இது. சிறிய தொல்லைகள் கூட அதை சேதப்படுத்தலாம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். புது உறவுகளை காக்க எச்சரிக்கையாய் இருப்பது ஞானமுள்ள செயல்.
