எரேமியா 3:8தள்ளுதற்சீட்டு
சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
Jeremiah 3:8
தள்ளுதற்சீட்டு
இஸ்ரவேலுக்கு தேவன் ஒரு தள்ளுதற்சீட்டைக் கொடுத்து அனுப்பிவிட்டார் - அசீரியரின் கையால் அந்த தேசமே அழிக்கப்பட்டது. இந்த பயங்கரமான தண்டனையை யூதா தன் கண்ணால் கண்டும், பயப்படாமல் அதே பாதையில் நடந்தது. கண்டதை பாடமாக்கிக்கொள்ளாமை என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது. தேவன் கொடுக்கும் எச்சரிக்கைகளை நம் வாழ்வில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
