யோபு 30:3பாழுமையின் பிள்ளைகள்
குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, வெகுநாளாய்ப் பாழும் வெறுமையுமான அந்தரவெளிக்கு ஓடிப்போய்,
Job 30:3
பாழுமையின் பிள்ளைகள்
பசியும் வறுமையும் அந்தக் குடும்பங்களை வாட்டியது. வெறுமையான, பாழான வனாந்தரத்திற்கு ஓடிப்போய் உணவு தேட வேண்டிய கொடிய நிலைமை அவர்களுடையது. இப்படிப்பட்ட தாழ்ந்த வாழ்க்கையின் மனிதர்களே இப்போது யோபுவை பழிக்கிறார்கள். தன்னுடைய இழிவை இன்னும் ஆழமாக உணர்த்த இதைச் சொல்கிறார்.
