யோபு 30:4காட்டுப் பூண்டு உணவு
செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; காட்டுப்பூண்டுகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது.
Job 30:4
காட்டுப் பூண்டு உணவு
செடிகளின் தழையையும் காட்டுப் பூண்டின் கிழங்கையும் உணவாகக் கொண்டிருந்தார்கள் அந்த ஏழைக் குடும்பங்கள். மனிதன் உண்ண வேண்டாத அளவுக்குக் கேவலமான உணவை அவர்கள் புசித்தார்கள். இது எவ்வளவு கொடிய வறுமை என்று நினைத்துப் பாருங்கள். அப்படிப்பட்டவர்களின் சந்ததியே இன்று யோபுவை பரிகாசிக்கிறது.
