மத்தேயு 18:3பிள்ளையைப் போல்
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Matthew 18:3
பிள்ளையைப் போல்
'மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால்' என்று இயேசு சொல்கிறார். குழந்தைகளுக்கு பதவி வேட்கை இல்லை, தன்னைப் பெரியவன் என்று காட்டும் ஆசை இல்லை; அவர்கள் பெற்றோர் மேல் முழுதும் நம்பிக்கை வைத்திருப்பார்கள். அந்த எளிய, சார்ந்திருக்கும் மனசு இல்லாமல் பரலோகராஜ்யத்தில் நுழைய முடியாது என்று இயேசு உறுதியாகச் சொல்கிறார். இது ஒரு புதிய பிறவியின் அடையாளம்.
